வெள்ளி, 29 அக்டோபர், 2010

மறதி

கண்ணாடி அலமாரிக்குள்
உள்ளீடற்று உருக்குலைந்த
டெடி கரடி...
அன்புக்குரிய என்னவளின்
அன்புக்குரியது
பரிதாபமாய்ப் பார்க்கிறது!

தன் குஞ்சுகளுக்காய்
அதன் பஞ்சுப் பொதிகளை
அபகரித்தவன்
எந்தன் அணில் தோழன்
சீச்... கீச்... அதோ
ஜன்னலோர வேம்புக் கிளையில்
அவன்தான்
மன்னித்து விடு தோழி
அலமாரிக் கதவு மூட
மறுபடியும்
மறந்து விடப் போகிறேன்.

(ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக