வெள்ளி, 29 அக்டோபர், 2010

சிங்காரச் சென்னையின் மாரிக்காலம்!!!



கைப்பந்துக் களம்தான்
கனமழையில் குளமானது !
சிங்காரச் சென்னையில்
யம வாகனங்களுக்கு
போக்குவரத்துத் தடை
அல்லவா?
சோர்ந்து போயிருந்த
வேகத்தடை விற்பன்னர்களுக்கு
'தண்ணீரைக் கண்டதும்
உற்சாகம் கரை புரண்டதே!
நீச்சல் குளமாக்கி-சுகமாய்
சூரியக் குளியல்
நடக்கிறது
அசை போட சுவையாய்
உணவகமும் அருகில் !
அமர்க்களமாய்
ஐந்து நட்சத்திரக்
கொண்டாட்டம்.

(ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக