சனி, 18 டிசம்பர், 2010

சென்னையில் திருவையாறு – சீசன் 6


லஷ்மன் ஸ்ருதி 6வது ஆண்டாக தொடர்ந்து நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’ இசை விழா, காமராஜர் அரங்கில் இன்று (18.12.2010) மாலை தொடங்குகிறது. பிற்பகல் 3 மணிக்கு இஞ்சிக்குடி சுப்ரமண்யம் அவர்களின் நாதஸ்வர இசையும் மாலை 5 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்ச்சியும் தொடங்குகின்றன.
இந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். கர்னாடக இசையில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய தெய்வீக அனுபவம்.பஞ்சரத்ன கீர்த்தனைகள் அடங்கிய கையேடும் ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. திருவையாறில் நடக்கும் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு செல்ல முடியாதவர்கள், சென்னையிலேயே அதை கண்டு களிக்க ஒரு அரிய வாய்ப்பு இது.
மாலை 7 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கான மழை பொழிய உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த இசைத் திருவிழா டிசம்பர் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக