சனி, 1 ஜனவரி, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. கடந்த ஆண்டின் கடைசி நாளான நேற்று ஆன்மிகக் கவிஞரும் பாடகருமான திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த மாதம் 25ம் தேதி 93வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள இவர், கன்னியாகுமரியில் இருந்து கைலாயம் வரை (14,000 கி.மீ.) இரண்டு முறை பாதயாத்திரை சென்றிருக்கிறார்.
*  7 வயதில் பழநி மலைக் குகையில் யோகா பயிற்சி.
* 11 வயதில் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம்.
* ஓட்டலில் சர்வர் வேலை.
* 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பா(ர)த யாத்திரை.
*  ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்து மறியல் செய்து, தடியடி வாங்கி,மீண்டும் 6 மாத சிறை.
* முருக பக்தராய், கவிஞராய், பாடகராய் உலகப் புகழ்.
* தென் ஆப்ரிக்காவில் அதிபர் நெல்சன் மண்டேலா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி, அவரது பாராட்டுதல்களைப் பெற்றது.
இப்படி ஏராளமான சுவையான தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

அவரது வாழ்க்கைப் பயணத்தின் அத்தனை சுவடுகளையும் இணையதளத்தில் விரிவாகப் பதிக்கும் முயற்சியில் லஷ்மண் ஸ்ருதி முனைப்புடன் இறங்கியிருக்கிறது. அந்தாதி வடிவிலான சுயசரிதை, எழுதிய பிற புத்தகங்கள், பாடல்கள், புகைப்படங்கள், வீடியோ... என்று தொகுப்பதற்கு ஏராளமாய் இருக்கிறது. பக்கங்கள் தயாரானதும் பரிமாறிக் கொள்வோம்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக