ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மஞ்சள் அழகி...

மஞ்சள் அழகி என் மஞ்சள் அழகி
இவள்தானா… இவள்தானா?
இளையபல்லவன் தேடுகிறேன்
எழில் தேவதையே எங்கே சென்றாய்
கடல்புறாவில் நானும் வாடுகிறேன்(மஞ்சளழகி)

அட்சயமுனை அழகியே
கள்வர்களின் தலைவியே
என் இதயத்தை 
எங்கே கவர்ந்து சென்றாய்…

இடை மீது கை போட்டு
அலை மீது நடை போட்ட
அந்த நாட்கள் மீண்டும் வருமா…
உயிரை மீட்டுத் தருமா? (மஞ்சளழகி)

புரியாத புதிரே
புலராத கதிரே
இருள் நீக்கவா
இதழ் சேர்க்கவே
அக்ரமந்திரம் அழைக்கிறதே… (மஞ்சளழகி)

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக